வேளாண்மைப் பல்கலையில் தானிய பாதுகாப்பு குறித்த பணியரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் பாதுகாத்து வைக்கப்படும் தானியங்களின் பாதுகாப்பு குறித்த பணியரங்கம் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.இராமசாமி, தானியங்களை விஞ்ஞான ரீதியாக பாதுகாப்பதன் மூலம் சீரான உணவு விநியோகம் மற்றும் வேளாண் பொருட்களுக்கான சீரான விலையினை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.



இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக இணை இயக்குனர் ஜெனரல் அழகுசுந்தரம் சிறப்புரையாற்றுகையில், தானிய பாதுகாப்பில் தனது கனடா, டெல்லி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நாட்டில் உள்ள உணவுப் பாதுகாப்பு கிடங்குகளில் பூச்சியியல் வல்லுனர்களை நியமிப்பதன் மூலம், அவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் கோடி மதிப்பிலான தானியங்களை முறையாகப் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.



பூச்சிக்கட்டுப்பாட்டு கூட்டமைப்பின் தலைவர் விஸ்வநாதன், சுமார் 30 சதவிகித தானியங்கள் சேமிப்பு கிடங்குகளில் பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாவதை எடுத்துரைத்தார். அவற்றைக் கட்டுப்படுத்த மித்தைல் ப்ரோமைடு மற்றும் பாஸ்ஜீன் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருவதையும் தெரிவித்தார்.

முன்னதா, இந்நிகழ்ச்சியில் துவக்கவுரையாற்றிய பன்னாட்டு பல்லுயிர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் பேசும்போது, பொது விநியோகத் திட்டத்தில் தரமான தானியங்களை விநியோகிப்பதில் விஞ்ஞான ரீதியான தானியப் பாதுகாப்பு முறைகள் தெரிதும் உதவும் என்று தெரிவித்தார். மேலும் பருவகால மாற்றங்களால் தொடர் வறட்சி ஏற்படும் சூழ்நிலையிலும் முறையான தானியப் பாதுகாப்பு முறைகள் உணவுப் பற்றாக்குறையின்றி தவிர்க்க உதவும் என்று தெரிவித்தார். 



இந்நிகழ்வில் பல்கலைக்கழக வெளியீட்டுத்துறை தனி அலுவலர் மோகன் நன்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விஞ்ஞானிகளும், விவசாயிகளும் மாணவர்களும், பூச்சி மருந்து நிறுவனங்களும் பங்கேற்றனர். மேலும் கண்காட்சி மற்றும் தானிய சேமிப்பு பொறி குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...