அசல் ஓட்டுனர் உரிமத்தை உரிமையாளர்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்- காவல்துறை ஆணையரிடம் டாக்சி ஓட்டுனர்கள் மனு

வாகனம் ஓட்டும் போது ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம் என்றும், செப்டம்பர் 1 முதல் கட்டாயமாக ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறையினர் ஒரிஜினர் லைசன்ஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். 

இந்த நிலையில், அனைத்து வாகன ஓட்டிகளும் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒரிஜினல் லைசன் வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கடும் என்னும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர்கள் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



வாடகை கார்களை இயக்கும் ஓட்டுனர்கள், அவர்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வண்டியின் உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியுள்ளது.

வாகனத்தை ஓட்டுனர்களை நம்பி ஒப்படைப்பதற்கு சாட்சியாக எண்ணி உரிமையாளர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அரசின் புதிய அறிவிப்பால் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, வாகன உரிமையாளர்கள் வாங்கி வைத்துள்ள அசல் ஓட்டுனர் உரிமத்தை, மீண்டும் ஓட்டுனர்களிடமே ஒப்படைக்க ஆணையிட வேண்டும்.

இவ்வறு, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...