"நதிகளை மீட்போம்" மாபெரும் விழிப்புணர்வு பயணம் - நாளை (செப்.3) கோவையில் தொடங்கும் பேரணியில் சேவாக், மிதாலிராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு


"நதிகளை மீட்போம்" இயக்கத்தின் தேசிய அளவிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி நாளை (செப்.3) கோவையில் துவங்க உள்ளது. வேகமாக வற்றி வரும் நம் தேசத்து நதிகளை மீட்க, அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரிக்க வரையறை வகுத்து, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச் செய்ய, 'நதிகளை மீட்போம்'  என்னும் விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது.

இது பற்றிய விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, கோவையில் நாளை (செப்.3) வ.உ.சி. மைதானத்தில் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ள இந்த பேரணி கூட்டத்தில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங்பத்நோர், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கே.ராமசாமி, இந்திய கிரிக்கெட் கேப்டன் மித்தாலிராஜ், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், மஹிந்திரா குழுமத்தின் மூத்த துணை இயக்குநர் விஜய்ராம் நக்ரா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த விழிப்புணர்வு பயணத்தின் போது, கோலாகலமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் என பலதரப்பினரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...