மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் அணி போராட்டம்

மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில்,  மாணவி அனிதாவுக்கு ஆதரவாக புரட்சிகர மாணவர் இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர்.



மேலும், அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வு மட்டுமே காரணமா என தெரியவில்லை என்று கூறிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...