ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி : 32 பேர் படுகாயம்



உடுமலை அருகே ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக வேன் மூலம் பயணித்தனர்.

வேன்-ஐ திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜீவானந்தம் (30) என்பவர் இயக்கி வந்தார்.

இந்நிலையில், வேன் உடுமலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆமினி பேருந்தின் மீது மோதியது. 



இந்த விபத்தில் ஓட்டுனர் ஜீவானந்தம் உட்பட வேனில் இருந்த ரங்கராஜ் (40), காமாட்சி (40) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், ஆமினி பேருந்து மற்றும் வேனில் பயணித்த 32 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த 8 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மற்றவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...