புகைப்பட கலைஞர்களின் பார்வை மாறுபட்டு இருக்க வேண்டும்- புகைப்பட கலைஞர் சிவகுருநாதன்

கோவை பிரஸ் கிளப் சார்பில் பிரதி ஞாயிறன்று இளம் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது.

அதன்படி, 9-வது பயிற்சிப்பட்டறை இன்று (செப்டம்பர் 3) காலை கோவை பிரஸ் கிளப் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தினமலர் நாளிதழ் தலைமை புகைப்படக் கலைஞர் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'புகைப்பட செய்திகளும், கோணங்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.



அப்போது அவர் பேசியதாவது:- 'முந்தய காலகட்டத்தில் புகைப்பட கலைஞர்களின் பணி என்பது மிகவும் சிரமமானது. டிஜிட்டல் காமிராக்களின் அறிமுகமில்லாத காலத்தில் 'பிலிம் காமிரா' உதவியுடன் ஒரு புகைப்படத்தை கட்சிதமாக எடுத்து அதை அலுவலகத்தில் கொடுப்பது அவ்வளவு எளிதல்ல.

இன்றைய உலகில் ஒரு புகைப்படம் எடுப்பது என்பது மிக எளிதாகிவிட்டது. இச்சூழலில், ஒவ்வொரு புகைப்படக் கலைஞரும் மாறுபட்டு சிந்திக்க வேண்டும். புகைப்படம் எடுக்கும் கோணங்களில் சற்றே மாறுபட்டு சிந்திக்க வேண்டும்.

அதே போல், விளையாட்டு அல்லது ஆண்மீகம் தொடர்பான புகைப்படங்களை எடுக்க செல்லும் போது, அது தொடர்பான குறைந்தபட்ச புரிதல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்பொழுது தான், சம்மந்தப்பட்ட துறைக்கு ஏற்ப புகைப்படங்களை எடுக்க முடியும்.



புகைப்படம் எடுக்கச் செல்லும் நேரத்தில், ஒவ்வொரு புகைப்பட கலைஞரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் காமிராவை எடுத்து புகைப்படம் எடுப்பது என்பது சாத்தியப்படாத ஒன்று. பல நேரங்களில் அது நமக்கு ஆபத்தாக அமையக்கூடும்'. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, கோவை பிரஸ் கிளப்-யின் பொருளாளர் சுப்பு சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசினை வழங்கி சிறப்பித்தார்.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...