விடாமல் மழை பெய்தும் தேங்கி நிற்காமல் ஓடிய மழை நீர் - கால்வாய்களில் சென்ற தண்ணீரால் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு



கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்த கன மழை, கோவை மண்ணை மட்டுமல்லாது, மக்களின் மனதையும் குளிர்வித்தது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி சராசரி மழை அளவாக 3 செ.மீ மழை பதிவானது. தொடர்ந்து, மழையின் அளவு படிப்படியாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 9.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இப்படி, தொடர்ந்து பெய்த கனமழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதில் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஆனால், தேங்கிய மழை நீர் சிறிது நேரத்திலேயே வடிந்தோடியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவையின் மிக முக்கிய பகுதியாக லங்கா கார்னர் உள்ளது. இந்த பகுதியில் இருப்பு பாதை அமைந்துள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மழை நீர் தேங்கி வந்தது. மழை பெய்து முடித்த 2 நாட்களுக்கு மழை நீர் வடியாமல் அப்படியே நிற்கும். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்று வந்தனர்.

பல ஆண்டுகளாக இந்த பிரச்னைக்கு தீர்வை தேடி பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்து வந்தனர். தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகராட்சி நிர்வாகம் லங்கா கார்னர் மேம்பால பகுதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது.

அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், அதிக அளவில் மழை பதிவான போதும் அப்பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கவில்லை. இதனால். அந்த மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



இதே போல, கிக்காணி பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும், அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியிலும் மழை நீர் தேங்கி நிற்கவில்லை. பெய்த மழை நீர் உடனடியாக வடிந்து கால்வாய்க்குள் சென்றது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திலிருந்து விடுபட்டதோடு, அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.  



அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மழை நீர் தேங்கி நிற்காவிட்டாலும், நீரால் அடித்து வரப்பட்ட மண் மற்றும் குப்பைகள் தேங்கி சேறும், சகதியுமாய் நிற்கின்றது.



இதனால், அப்பகுதியில் வாகனம் ஓட்டி செல்பவர்கள், சகதியில் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கும் உரிய தீர்வு எடுத்து, சகதியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அவினாசிலிங்கம் கல்லூரியை ஓட்டியுள்ள பகுதிகளில் பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. உடனடியாக அதிகாரிகள் பள்ளங்களை மூடவும், தேங்கியுள்ள நீர்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டால் கல்லூரிக்கு சென்று வரும் மாணவிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...