நீலகிரி கோடப்பமந்து கால்வாயினை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், உதகை, கோடப்பமந்து கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பைகளுடன் மழைநீர் கோடப்பமந்து கால்வாயில் வழிந்தோடியதால், ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் தேங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.



இந்நிகழ்வின் போது, உதகை ஏரியினை வந்தடையும் கோடப்பமந்து கால்வாயில் கனமழை பெய்யும்பொழுது ஏற்படும் வெள்ளநீர் தேங்காமால் சென்றடையவும், உதகை ரயில் நிலைய சாலையில் மழைநீர் தேங்காமல் வழிந்தோட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல மத்திய பேருந்து நிலைய கால்வாய்களில் மழைநீர் தேங்காமல் முறையாக கோடப்பமந்து கால்வாயில் சென்றடைய உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்தி சீர்செய்யுமாறும், உதகை ஏரிக்கு கோடப்பமந்து கால்வாய் மூலம் வந்தடையும் மழைநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளுமாறும் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.



இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் (ம) ஆணையாளர் (பொ), மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...