உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் மாநிலம் கோரக்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி 60 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. நாட்டையே அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைய வைத்த இந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 30 குழந்தைகள், பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பகுதியில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், 19 குழந்தைகள் பிரசவத்தின் போது அல்லது பிரசவத்திற்கு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளன.



இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரிகள் மீது உத்தரபிரதேச அரசு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மாவட்ட நீதிபதி ரவீந்திர குமாரும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு 19 நோட்டீஸ் அனுப்பி உள்ளார். போதிய வளர்ச்சி இன்றி பிறந்தது, மிக குறைந்த எடையுடன் பிறந்ததே குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் கைலாஷ் குமார் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து வெளிவரும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கள் குறித்த தகவல்கள், மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனவும் சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...