உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் மாநிலம் கோரக்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி 60 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. நாட்டையே அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைய வைத்த இந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 30 குழந்தைகள், பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பகுதியில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், 19 குழந்தைகள் பிரசவத்தின் போது அல்லது பிரசவத்திற்கு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளன.



இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரிகள் மீது உத்தரபிரதேச அரசு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மாவட்ட நீதிபதி ரவீந்திர குமாரும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு 19 நோட்டீஸ் அனுப்பி உள்ளார். போதிய வளர்ச்சி இன்றி பிறந்தது, மிக குறைந்த எடையுடன் பிறந்ததே குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் கைலாஷ் குமார் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து வெளிவரும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கள் குறித்த தகவல்கள், மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனவும் சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...