கோவையில் சுற்றுச்சூழலிற்கு நன்மை விளைவிக்கும் வகையில் இந்தியன் தபால் நிலைய இடத்தில் மரக்கன்றுகள் நடவு


கோவை மாவட்டம், சிட்கோ அருகே அமைந்துள்ள இந்தியன் தபால் நிலையம் பகுதியில் புதர்களால் இயற்கைக்கு கேடுஏற்படுத்தி வந்த 25 சென்ட் நிலப்பரப்பில் தற்போது இந்தியன் தபால் நிலையத்தின் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 



கோவை, சிட்கோ அருகே தொழில் பேட்டை மற்றும் இந்தியன் தபால் நிலைய அலுவலகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் முற்புதற்கள் மற்றும் இதர கழிவுகளால் நிலம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை, கோ கிளீன் மற்றும் கிரீன் பேஸ் II ஆகியவை இணைந்து குடியிருப்போர் நலச்சங்கத்தின் மூலம் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, இப்பகுதியில் சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாக வகையிலான மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டது.



அதன்படி, கோவை தபால் நிலைய தெற்கு துணைப் பிரிவு ஆய்வாலர் ஏ.என்.சாந்தினி பேகம் தலைமையிலான குழுவினர், மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்ட்டர் ஜெனரல் சாரதா சம்பத், தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை நடவுசெய்தனர்.



இதுகுறித்து கோவை தபால் நிலைய தெற்கு துணைப் பிரிவு ஆய்வாலர் ஏ.என்.சாந்தினி பேகம் கூறுகையில், "கருவேலமரங்கள் உள்ளிட்டவற்றால் இயற்கைக்கு கேடுவிளைவிக்கும் வகையில் காணப்பட்ட இப்பகுதியினை சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் மாற்ற திட்டமிட்டோம். அதன்படி, தற்போது 25 சென்ட் அளவுகொண்ட இடம் தூய்மைபடுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை இயற்கை சூழலுக்கு உகந்ததாக இருக்கும்" என்றார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...