கோவையில் பெய்த கனமழையால் நீரில் மிதக்கும் வீடுகள் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பு

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தோடுகிறது.

இந்நிலையில், சுங்கம் அருகே உள்ள கல்லுக்குழி பகுதி, நேற்று பெய்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வீட்டின் பாதி சுவர் அளவுக்கு நீர் தேங்கி கிடப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.



இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறும் போது, தனது தந்தை உடல்நலக் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது, மருத்துவ பரிசோதனை குறிப்புகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டன. இதனால், தனது தந்தைக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வேதனையுடன் அவர் கூறினார். 

ஒவ்வொறு ஆண்டும் பெய்யும் கனமழையால், வீடுகள் நீரில் மூழ்கி பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே செல்வதாகவும்,  குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வேறுஇடத்தில் வீடு கட்டித் தருவதாக அதிகாரிகள் அளிக்கும் வாக்குறுதிகளும் வாடிக்கையாகி விட்டதாக கல்லுக்குழி பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



எனவே, தற்போது தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழைக்கு இந்த பகுதியில் 3 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...