மாணவி அனிதாவிற்கு நீதிகோரி வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதுமுள்ள மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.



கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் நியாயமான இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவம் அவர்கள் வலியுறுத்தினர்.



Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...