நீலகிரி மாவட்டத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்த விழிப்புணர்வு முகாம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் மீக்கேரி கிராமத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று (செப்.,5) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர், முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,  நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மூலிகை பயிர்கள் என அனைத்து வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 

உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை நேரடி உணவாக உட்கொள்வதால், மருந்துகளில் உள்ள இரசாயன பொருட்களின் நச்சுத்தன்மை மனிதர்களுக்கு பல நோய்களை உருவாக்குகின்றன. எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறி மற்றும் பழங்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயன கொல்லிகள், அதிக அளவிலான உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து மகசூலை பெருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் பாதுகாப்பு கவசங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை வட்டத்தில் வரும் 07-ம் தேதி குந்தசப்பை பகுதியிலும், 14-ம் தேதி பிக்கட்டி பகுதியிலும், 19-ம் தேதி சோலூர் பகுதியிலும், 21-ம் தேதி இத்தலார் பகுதியிலும், 26- ம் தேதி கடநாடு பகுதிகளிலும்,  குன்னூர் வட்டத்தில் 13-ம் தேதி பிக்கோல் பகுதியிலும், 15-ம் தேதி கெரடா பகுதியிலும், கோத்தகிரி வட்டத்தில் 06-ம் தேதி கூக்கல் பகுதியிலும், 07-ம் தேதி தேனாடு  பகுதியிலும், கூடலூர் வட்டத்தில் 07-ம் தேதி  மாங்குழி பகுதியிலும், 13-ம் தேதி தஞ்ஜோரா பகுதியிலும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. 

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (கோவை) இல.பெருமாள் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் டி.ஜெ.மீராபாய் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...