கோவையில் டிரிப் பேக்டரியின் முதலாவது விடுமுறை அங்காடி துவக்கம்

பயணம் செய்வோருக்கான புதிய அனுபவத்தை தரும் வகையில் கோவையில் முதலாவது விடுமுறை அங்காடியை டிரிப் பேக்டரி துவங்கியுள்ளது. இதனை நடிகர் மற்றும் இயக்குநருமான பாக்யராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நடிகை பூர்ணிமா பாக்யராஜ் குத்துவிளக்கேற்றினார்.



இதனைத்தொடர்ந்து, முதல் சுற்றுலா பயணத்திற்கான டிக்கெட்யை ஸ்ரீ அண்ணப்பூர்ணா ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். இந்நிறுவனம் ஏற்கனவே, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் துவங்கி, தற்போது கோவையிலும் அடியெடுத்து வைத்துள்ளது.



பெரும்பாலான பயணிகள் தங்களது விடுமுறை சுற்றுலா பயணத்தேவைக்கு நேரடியாக ஏஜெண்டுகளை தேடுகின்றனர். அல்லது நேரடியாக புக்கிங் செய்கின்றனர். ஆன்லைனில் 18 சதவிகிதம் பேர் மட்டுமே பதிவு செய்கின்றனர். எனவே, பயணம் செய்வோருக்கான அனைத்து தேவைகளும் டிரிப் பேக்டரியின் மூலம் கிடைக்க கோவையில் இந்நிறுவனம் துவங்கியுள்ளது.



இது குறித்து டிரிப் பேக்டரியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் அமித் அகர்வால் கூறுகையில், "விடுமுறையில் உள்நாட்டுப் பயணம், வெளிநாட்டுப் பயணம் அவரவர் விரும்பும் விதத்தில் அமைய தேவையான அனைத்து தொழிநுட்ப வசதிகளையும் டிரிப் பேக்டரி ஹாலிடே ஸ்டார் கொண்டுள்ளது. எங்களது தொடர்பில் உள்ள சப்ளையர், ஏர்லைன் பங்குதாரர்கள் சிறப்பான விலையை அளிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குறைவான செலவு தான் ஏற்படுகிறது" என்றார்.

டிரிப் பேக்டரி நிறுவனர் வினாய் குப்தா பேசுகையில், "ஒவ்வொரு விடுமுறை பயணிகளையும் 2020-ம் ஆண்டுக்குள் சென்றடைய வேண்டும் என்பதே டிரிப் பேக்டரியின் திட்டம். பயணிகளுக்கு விரைவான சேவை, அருமையான அனுபவங்களை ஈடுஇணையற்ற வகையில் தர வேண்டும். டிரிப் பேக்டரியில் நுழைவோர் சில நிமிடங்களில் சுற்றுலா திட்டத்தை பெற முடியும். முழுமையான விடுமுறை சுற்றுலா அனுபவம் பல மடங்கு உயர்ந்ததாக அவர்களுக்கு தெரியும்" என்றார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...