கோவையில் டிரிப் பேக்டரியின் முதலாவது விடுமுறை அங்காடி துவக்கம்

பயணம் செய்வோருக்கான புதிய அனுபவத்தை தரும் வகையில் கோவையில் முதலாவது விடுமுறை அங்காடியை டிரிப் பேக்டரி துவங்கியுள்ளது. இதனை நடிகர் மற்றும் இயக்குநருமான பாக்யராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நடிகை பூர்ணிமா பாக்யராஜ் குத்துவிளக்கேற்றினார்.



இதனைத்தொடர்ந்து, முதல் சுற்றுலா பயணத்திற்கான டிக்கெட்யை ஸ்ரீ அண்ணப்பூர்ணா ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். இந்நிறுவனம் ஏற்கனவே, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் துவங்கி, தற்போது கோவையிலும் அடியெடுத்து வைத்துள்ளது.



பெரும்பாலான பயணிகள் தங்களது விடுமுறை சுற்றுலா பயணத்தேவைக்கு நேரடியாக ஏஜெண்டுகளை தேடுகின்றனர். அல்லது நேரடியாக புக்கிங் செய்கின்றனர். ஆன்லைனில் 18 சதவிகிதம் பேர் மட்டுமே பதிவு செய்கின்றனர். எனவே, பயணம் செய்வோருக்கான அனைத்து தேவைகளும் டிரிப் பேக்டரியின் மூலம் கிடைக்க கோவையில் இந்நிறுவனம் துவங்கியுள்ளது.



இது குறித்து டிரிப் பேக்டரியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் அமித் அகர்வால் கூறுகையில், "விடுமுறையில் உள்நாட்டுப் பயணம், வெளிநாட்டுப் பயணம் அவரவர் விரும்பும் விதத்தில் அமைய தேவையான அனைத்து தொழிநுட்ப வசதிகளையும் டிரிப் பேக்டரி ஹாலிடே ஸ்டார் கொண்டுள்ளது. எங்களது தொடர்பில் உள்ள சப்ளையர், ஏர்லைன் பங்குதாரர்கள் சிறப்பான விலையை அளிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குறைவான செலவு தான் ஏற்படுகிறது" என்றார்.

டிரிப் பேக்டரி நிறுவனர் வினாய் குப்தா பேசுகையில், "ஒவ்வொரு விடுமுறை பயணிகளையும் 2020-ம் ஆண்டுக்குள் சென்றடைய வேண்டும் என்பதே டிரிப் பேக்டரியின் திட்டம். பயணிகளுக்கு விரைவான சேவை, அருமையான அனுபவங்களை ஈடுஇணையற்ற வகையில் தர வேண்டும். டிரிப் பேக்டரியில் நுழைவோர் சில நிமிடங்களில் சுற்றுலா திட்டத்தை பெற முடியும். முழுமையான விடுமுறை சுற்றுலா அனுபவம் பல மடங்கு உயர்ந்ததாக அவர்களுக்கு தெரியும்" என்றார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...