பாலியல் சீண்டல் விவகாரம் : உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சங்கத்தினர் மனு


கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (செப்.,4) நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். 

போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகர சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர் ஜெயராமன் அங்கிருந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீது பாலியல் சீண்டல் செய்ததாக தனியார் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது.



இதைத்தொடர்ந்து, பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று (செப்.,6) கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து  பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...