இன்சூரன்ஸ் மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியால் காப்பீட்டில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, உடனடியாக மத்திய அரசு இன்சூரன்ஸ் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜிஎஸ்டி வரி விதிப்பின் படி இன்சூரன்ஸ் பிரீமியத் தொகையின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நாற்பது கோடிக்கும் மேலானவர்கள் இன்சூரன்சில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரியின் காரணமாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புதியதாக இன்சூரன்சில் சேருபவர்களின் எண்ணிக்கை இதன் காரணமாக குறைந்து வருகிறது. 

எனவே, உடனடியாக மத்திய அரசு இந்த பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. அதில் கோவையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர். இந்த கையெழுத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

இவ்வாறு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...