இன்சூரன்ஸ் மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியால் காப்பீட்டில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, உடனடியாக மத்திய அரசு இன்சூரன்ஸ் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜிஎஸ்டி வரி விதிப்பின் படி இன்சூரன்ஸ் பிரீமியத் தொகையின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நாற்பது கோடிக்கும் மேலானவர்கள் இன்சூரன்சில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரியின் காரணமாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புதியதாக இன்சூரன்சில் சேருபவர்களின் எண்ணிக்கை இதன் காரணமாக குறைந்து வருகிறது. 

எனவே, உடனடியாக மத்திய அரசு இந்த பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. அதில் கோவையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர். இந்த கையெழுத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

இவ்வாறு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...