நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா

மதுரையை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரது மனைவி சபரிமாலா (34). இவர், திண்டிவனம் அடுத்த வைரபுரம் ஊராட்சி. ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனது ஏழு வயது மகன் ஜெயசோழனையும், அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்.,6) பள்ளிக்கு வந்த ஆசிரியை சபரிமாலா, பணியை புறக்கணித்து விட்டு, தனது மகன் ஜெயசோழனுடன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்தக் கோரியும், பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையுடன் ஆசிரியை நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 



அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வெள்ளிமேடுபேட்டை போலீசார், போராட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதை ஏற்று சபரிமாலா தனது போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில், இன்று (செப்.,7) மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணனை சந்தித்த சபரிமாலா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தையும் வழங்கினார். 

பணியை ராஜினாமா செய்தது குறித்து சபரிமலா கூறுகையில், "அரசு பணியில் இருப்பதால் சமூக பணிகளில் ஈடுபட முடியவில்லை. இதனால், பதவியை ராஜினாமா செய்தேன். கிராமந்தோறும் சென்று படிக்காத இளைஞர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...