மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டி துவக்கம்


மாநில அளவிலான குடியரசுத் தின மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டியை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி. வி.ஜெயராமன் துவக்கிவைத்தார். 

கோவை மாவட்டம் அரசம்பாளையம், எஸ்.வி.எஸ்.பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் இன்று மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் கலந்துகொண்டு சதுரங்கப்போட்டியை துவக்கிவைத்தார்.



இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 7 முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, குறுமையம், மாவட்ட மற்றும் மண்டல அளவு என ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெற்றவர் 360 பேர் மாநில அளவில் நடைபெறுகிற போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு கீழ் என உள்ள 4 பிரிவுகளில் சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் மற்றும் விளையாட்டு விடுதி என 15 மண்டலங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்) செல்வகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் வனஜா, நசாரூதின், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (பொ) கீதா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...