மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியது

கோவை மாவட்டம் கேரம் சங்கம் மற்றும் கோவை வடக்கு அரிமா சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் 2016-17 -க்கான  போட்டிகள் நேரு மைதானத்தில் இன்று (09,09,2017) துவங்கியது. 



துவக்க விழாவில், கோவை மாவட்டம் கேரம் சங்கம் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்டம் கேரம் சங்கம் சேர்மன் யுவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா சங்கம் 324-B5 மாவட்ட துணை ஆளுநர் வெங்கடசுப்ரமணியன் போட்டியை துவக்கி வைத்தார்.

3 நாட்கள் நடைபெறும் கேரம் போட்டியில் சீனியர் மற்றும் ஜுனியர்களுக்கான தனி மற்றும் இருவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றவுள்ளது. இதில், கோவையைச் சேர்ந்த 36 கேரம் கிளப்பின் துணை சங்கம் சார்பில் தனிப் போட்டியில் 164 குழுவும், இருதரப்பினர் போட்டியில் 64 குழுவாகவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. 



அதேபோல, பள்ளி மாணவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயது மற்றும் 14 வயதோருக்கன கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், 18 மற்றும் 14 வயதோருக்கான பிரிவில் மொத்தம் ஆண்கள் 48 பேரும், பெண்கள் 24 பேரும் விளையாடவுள்ளனர். 

நாளை மறுநாள் (11.09.2017) அன்று நடைபெறும் காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு மொத்தம் பரிசுத் தொகையாக ரூ.25,000 மற்றும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.4000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசுத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும்.

இதில், கோவை வடக்கு அரிமா சங்கம் தலைவர் மனோகரன், செயலாளர் கோபிநாத், பொருளாளர் வெள்ளிங்கிரி, அரிமா ஜான் பீட்டர், கோவை வடக்கு அரிமா சங்கம் உறுப்பினர்கள் மற்றும் கோவை மாவட்டம் கேரம் சங்கம் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...