மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியது

கோவை மாவட்டம் கேரம் சங்கம் மற்றும் கோவை வடக்கு அரிமா சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் 2016-17 -க்கான  போட்டிகள் நேரு மைதானத்தில் இன்று (09,09,2017) துவங்கியது. 



துவக்க விழாவில், கோவை மாவட்டம் கேரம் சங்கம் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்டம் கேரம் சங்கம் சேர்மன் யுவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா சங்கம் 324-B5 மாவட்ட துணை ஆளுநர் வெங்கடசுப்ரமணியன் போட்டியை துவக்கி வைத்தார்.

3 நாட்கள் நடைபெறும் கேரம் போட்டியில் சீனியர் மற்றும் ஜுனியர்களுக்கான தனி மற்றும் இருவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றவுள்ளது. இதில், கோவையைச் சேர்ந்த 36 கேரம் கிளப்பின் துணை சங்கம் சார்பில் தனிப் போட்டியில் 164 குழுவும், இருதரப்பினர் போட்டியில் 64 குழுவாகவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. 



அதேபோல, பள்ளி மாணவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயது மற்றும் 14 வயதோருக்கன கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், 18 மற்றும் 14 வயதோருக்கான பிரிவில் மொத்தம் ஆண்கள் 48 பேரும், பெண்கள் 24 பேரும் விளையாடவுள்ளனர். 

நாளை மறுநாள் (11.09.2017) அன்று நடைபெறும் காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு மொத்தம் பரிசுத் தொகையாக ரூ.25,000 மற்றும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.4000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசுத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும்.

இதில், கோவை வடக்கு அரிமா சங்கம் தலைவர் மனோகரன், செயலாளர் கோபிநாத், பொருளாளர் வெள்ளிங்கிரி, அரிமா ஜான் பீட்டர், கோவை வடக்கு அரிமா சங்கம் உறுப்பினர்கள் மற்றும் கோவை மாவட்டம் கேரம் சங்கம் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...