பதவியில் நீடிப்பது எப்படி என்பதை மட்டுமே எடப்பாடி தலைமையிலான அரசு ஆராய்ச்சி - காங்கிரஸ் விமர்சனம்

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் மதநல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நாடாளுமன்ற ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடத்துவது அடிப்படை உரிமை. நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்திரவினை மறுபரீசிலணை செய்ய வேண்டும். அமைதி வழியான போராட்டங்கள் நடத்தக்கூட தமிழக அரசு அனுமதிப்பதில்லை. மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை உச்சநீதிமன்றமே தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 



உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தி விட்டு மாணவர்களின் கல்வி உதவித் தொகையை குறைப்பது அநீதி. 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 24 மணி நேரமும் பதவியில் இருப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மக்கள் நலனை பேணும் அரசு அமைய இந்த அரசு பதவி விலக வேண்டும். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...