செல்பி விபரீதம்: கோத்தகிரி நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த நிலையில் மீட்பு


நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேத்தரீன் நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று (செப்., 9) சுற்றுலா பயணியான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் அந்த நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். 

அப்போது, எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அங்குவந்த மீட்புப் படையினர் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்கு மழை பெய்யத் துவங்கியதை அடுத்து தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலையில் தீயணைப்புப் படையினர், ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 



இதனிடையே, கேத்தரீன் நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....