செல்பி விபரீதம்: கோத்தகிரி நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த நிலையில் மீட்பு


நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேத்தரீன் நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று (செப்., 9) சுற்றுலா பயணியான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் அந்த நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். 

அப்போது, எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அங்குவந்த மீட்புப் படையினர் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்கு மழை பெய்யத் துவங்கியதை அடுத்து தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலையில் தீயணைப்புப் படையினர், ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 



இதனிடையே, கேத்தரீன் நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...