ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு நீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 10) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விவசாயிகளின் பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:- தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று விவசாயிகளுக்கென அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.

தற்பொழுது ஒரு போக விவசாயத்திற்காக பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையினை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டார். அதனைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 10) முதல் பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு 08.01.2018 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 800 மி.க.அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆழியாறு, கோட்டூர், ஆணைமலை ஆகிய பகுதிகளுக்குட்பட்ட விவசாயிகளின் விவசாய பயன்பாட்டிற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறப்பு அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் பயனடையுமாறு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நீராபானம் விற்பனை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து நீராபானம் விற்பனையானது நடைமுறையில் உள்ளது. விவசாயிகளுக்கு வண்டல் வழங்குவதற்காக அனைத்து ஏரி, குளங்களிலும் தூர்வாரும் பணி கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் நல்ல சத்துடன் கூடிய வண்டல் மண் விவசாயிகளுக்கு கிடைப்பதுடன் மட்டுமல்லாமல் அனைத்துக்குளங்களும் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

அன்னூர், அத்திகடவு அவிநாசி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. மேலும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதனை மறுசுழற்சி முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்திட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, பொதுப்பணித்துறை நிர்வாக ஆதாரம் செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் நரேந்திரன், கருணாகரன், ஆழியாறு பழைய ஆயக்கட்டின் பாசன சங்க செயலாளர் பட்டீஸ்வரன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...