கோவை மாநகராட்சியைக் கண்டித்து வரும் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி முடிவு

கோவை மாவட்ட தி.மு.க தலைமை அலுவலகத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்றன.

பின்னர் கூட்டத்தில், கோவை மாநகராட்சி குப்பைகளுக்கு வரி, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகை வசூல் செய்வது உள்ளிட்ட ஆணைகளை உடனே ரத்து செய்யக் கோரி 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறியதாவது:- கோவை மாநகராட்சி புதிய வரி சீராய்வு என்ற அடிப்படையில் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அளவிடுவது, குப்பைகளுக்கு வரி போடுவது, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகையாக 4,000 ரூபாய் செலுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சேய்து வருகிறது. 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 18-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிளமேடு, குனியமுத்தூர், குறிச்சி, கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சிங்காநல்லூர், பெரிய கடை வீதி, பாப்பநாயக்கன் புதூர் என அந்தெந்த பகுதிகளின் சார்பில் டவுன் ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...