கோவை மாநகராட்சிக்கும் ஜெர்மனி நாட்டின் பிரான்ஹோஃபர் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தில் கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதிலிருந்து மாநகராட்சி சார்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியும், ஜெர்மனி நாட்டின் ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள பிரான்ஹோஃபர் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து சீர்மிகு திட்டத்தின் கீழ் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகம் நிறுவ தமிழக அரசு கடந்த 4.07.2017-ல் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 11) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில், கோவை மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகம் கோவை மாநகராட்சியின் சார்பில், ஆணையர் க.விஜயகார்த்திகேயன்-வும் ஜெர்மன் நாட்டின் ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள பிரான்ஹோஃபர் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அதன் இந்திய நாட்டின் இயக்குநர் ஆனந்தி அய்யரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

இந்த ஆய்வகம், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மற்ற நகரங்களை பங்குபெற செய்வதுடன் ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், இந்திய - ஜெர்மனி ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் கோவை மாநகரத்திற்கு மேலாண்மை, முதலீட்டுத் திட்டம் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி, திறன் வளர்ப்பு திட்டங்கள் மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். மேலும், திட்டங்களை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வது, திட்ட பங்குதாரர்களுக்கிடையேயான நேர்முக உரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் வழங்குவது, வல்லுநர்கள் மூலம் அலுவலர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, ஸ்மார்ட் சிட்டி தொகுதிகள் மற்றும் மாநகரத்தின் விவரக்குறிப்புகளை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வது, திட்டம் மற்றும் தொழில் கூட்டுறவினை உருவாக்கி ஒருங்கிணைப்பது, உள்ளுர் மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பயிற்சி பட்டறைகளில் பங்குதாரர்கள் மற்றும் அலுவலர்களை பங்குபெற செய்வது, நீர் உட்கட்டமைப்பு, கழிவு மேலாண்மை, நகர்புற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் திட்டமிடுதல், நகர்புற ஆளுமை, போன்ற பணிகள் இத்திட்டத்தின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.  

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டின் தூதுவர் அகிங் பேபிக், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...