சிறந்த நகைக்கடைக்கான விருதை பெற்றது சுமங்கலி நிறுவனம்

கோவையில் கடந்த ஆண்டு சில்லறை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய நகைக் கடை நிறுவனங்களுக்கு யூ.பி.எம். இந்தியா சார்பில் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கோவையில் சிறந்து விளங்கிய நிறுவனமாக சுமங்கலி நகைக்கடை நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 

தலைநகரில் உள்ள மிகப்பெரிய நகைக்கடைகள், இறக்குமதி, ஏற்றுமதி வியாபாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில் பெற்றுக் கொண்டார். 



விருது பெற்றது தொடர்பாக அவர் பேசுகையில், "மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்படும் இடங்களில் கோவையும் ஒன்று. நகைகளை வடிவமைக்கும் கலைஞர்கள் இங்குதான் அதிகம் உள்ளனர்". இவ்வாறு அவர் கூறினார். 

ஆண்டுதோறும் 25 மிகப் பெரிய கண்காட்சிகளும், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் யூ.பி.எம். இந்தியா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...