சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு


தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் குடகில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. ஆனால், ஆளுநர் இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க., செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-  ஆட்சியை கவிழ்ப்பேன் என்ற தினகரன் பேட்டிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. திமுகவுக்கும் எங்களுக்கும் போட்டி எனக்கூறி தினகரன் விளம்பரம் தேடப்பார்க்கிறார்.  தினகரனுக்கு விளம்பரம் தேடித்தர நான் தயாராக இல்லை.

பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளோம். 

ஜனநாயக அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். முதலமைச்சர், பெரும்பான்மை இருப்பதாக கருதினால், தைரியம் இருந்தால் சட்டசபையை கூட்டட்டும். கொல்லைபுறமாக திமுக ஆட்சிக்கு வராது.

சட்டசபையை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டசபை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. 

அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்த நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. பெரும்பான்மை நிரூபித்த பிறகு முதலமைச்சர் என்னை பற்றி பேசட்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...