நீட் தேர்வுக்கு எதிராக கோவையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்குப் பின் நடத்தப்பட்டது. 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடந்தன.



இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

தொடர்ந்து, நீட் தேர்விற்கு எதிராக அனிதா போராடி வந்த நிலையில் தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்புகள் பரிக்கப்பட்டதன் விரக்தியினாலும் செப்டம்பர் 1ம் தேதியன்று மாணவி அனிதா தற்கொலை செய்து உயிரிழந்தார்.



இதனால், ஆவேசமடைந்த தமிழக மக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், அரசியல் அமைப்பினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும். அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் கோவையில் இன்று இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், 'எங்கள் போராட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அதன்காரணமாகவே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றோம். மேலும், அரசு இந்த போக்கை கடைபிடித்தால் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும்' என்றனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...