கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம்

கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் ஒசூர் ரோடு, ஆத்ரா ஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் குத்துவிக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தார். கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் தலைவர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். துணைத் தலைவர் முத்துகுமார் வைர விழா கொண்டாட்டத்தில் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் பற்றிய விரிவுரையை எடுத்துரைத்தார்.



பின்னர், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழாவின் முத்திரை சின்னத்தை அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சோமசுந்தரம் வெளியிட்டார்.



அதனைத் தொடர்ந்து, டிப்ளமோ தர மேலாண்மை படிப்பிற்கான புதிய கோர்ஸ் சங்கத்தின் சார்பில் துவங்கப்பட்டது. இதுகுறித்து கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் மற்றும் டிப்ளமோ தர மேலாண்மை கோர்ஸ் குழுவின் தலைவர் ஸ்ரீனிவாசன் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக டீன் சரவண செல்வன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டிப்ளமோ தர மேலாண்மை படிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.



பின்னர், டிப்ளமோ முதுகலை பட்டப்படிப்பில் பயின்ற 30 மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் உறுப்பினர் விவேக் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கொடிசியா தலைவர் சுந்தரம் மாணவர்கள் மத்தியில் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார். பின்னர், அனைவருக்கும் பட்டமளிப்பு சான்றிதழை வழங்கி கெளரவித்தார். இறுதியில் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.



இந்நிகழ்வில், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...