முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

அலுவலர் அந்தஸ்துக்கு குறைவான தரத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மைய முப்படைவீரர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பாரதப்பிரதமரின் கல்வி உதவித்தொகையினைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுக்கு மேல்பெற்று தேர்ச்சி பெற்று தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை www.ksb.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2017 ஆகும்.

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்தோர்களின் வாரிசுகள் இக்கல்வி நிதியுதவியினைப் பெற குறித்த காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...