நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்


ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். பிற்காலத்தில் எந்த ஒரு விவகாரத்திலும் நீதிமன்றத்தை நாட முடியாத அளவிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்கும். 5 மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கேவலம். ரூ.40,000, ரூ.50,000 சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. ஆசிரியர்கள் என்ன தொழிலாளர் வர்க்கத்தினரா?.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய அமைப்பினர் ஒன்றும் சுப்ரீம் பவர் இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணராமல் போராட்டம் நடத்தலாமா?. போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்.,18 ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...