ராஜவாய்க்காலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளையும் மீட்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?


கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அங்கு குடியிருப்போருக்கு மாற்று வீடுகளை ஒதுக்கி நீர்நிலைகளை மீட்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு அறிவித்தது. அதனடிப்படையில், கோவை போத்தனூர் அருகே உள்ள அணைமேடு, முத்துகாலனி, சேரன் நகர், அண்ணா காலனி, உக்கடம், பெரியகுளம், தெற்கு கரை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக நடந்த நடவடிக்கையின் மூலம்  1000-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

இதனால், கோயம்புத்தூர் மாநகராட்சியும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. 

இந்நிலையில், கோவையில் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு :-



சிங்காநல்லூர் குளம் மற்றும் வாய்க்காலில் சுமார் 1500 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. பேரூர் பெரிய குளத்தில் விவசாய  நிலங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. செல்வம்பதி குளம் மற்றும் குமாரசாமி குளத்தில்  சுமார் 3500 வீடுகள்  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு நுகர்வோர் தானியக் கிடங்கு,விவசாய பல்கலைக்கழகம் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.கோயமுத்தூர் அணைக்கட்டு எனும் தேவிசிறை தடுப்பணை நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 530 அடி அகலம் கொண்ட அணையானது 150 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செங்குளம் விவசாய நிலங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.





போத்தனூர் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ராஜவாய்க்கால் மீட்கப்படுவதைப் போல, மேற்கண்ட ஆக்கிரமிப்பு நீர்நிலைகளும் மாநகராட்சியால் மீட்டெடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...