மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கொடிசியா சிறு தொழில் சங்கங்கள் மனு

தமிழகத்தில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை ஆங்காங்கே மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபானக் கடையை மூட உத்தரவிடக்கோரி கோவை கொடிசியா சிறு தொழில் சங்கங்கள் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில், இரண்டு புதிய தொழில்நிறுவனங்களை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது இரு நிறுவனங்களில் ஒன்று, கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்கா, கோவை,  பல்லடம் - கொச்சின் தெற்கு பகுதியில் இருந்து 25 கி.மீ தொலைவில் 138 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது.  இதில், கொடிசியாவின் சிறு தொழில் சங்கங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்து உள்ளனர்.  இந்த தொழில் நிறுவனங்களின் மூலம் சுமார் 4,000 ஊழியர்கள் வேலைவாய்ப்பை பெற உள்ளனர்.

தற்போது கள்ளபாளையம் தொழில்நிறுவனத்தை அமைப்பதற்கான வெளிக்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் பெறும் நிலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.

இந்த சூழலில், கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்காவில் தொழில்நிறுவனம் அமைய உள்ள இடத்தை ஒட்டி, புதிய மதுபானக் கடை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், பல கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் எங்களது நிறுவனத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பொருட்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லா நிலை நிலவுகிறது.

இதேபோல, மதுபானக் கடை அமையவிருக்கும் பகுதியின் எதிரே 20மீ தொலைவில் கோவில்களும் உள்ளது. இதில், நாள்தோறும் வழிபாடு நடத்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால். பொதுமக்களும். பெண்களும் இந்த மதுபானக் கடையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்காவில் புதிய மதுபானக் கடை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...