நீலகிரி ஆட்சியர் தலைமையில் மனுநீதிநாள் முகாம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம், கேத்தியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு ரூ.60,23,000 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

“இந்த மனுநீதி நாள் விழாவின் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான் பொருள். தமிழக அரசின் உத்தரவின்படி அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். தமிழக அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான திட்டங்களான உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக நலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம் வழங்குதல், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், விலையில்லா சீருடைகள் 4 செட் வழங்கும் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விலையில்லா பாடநூல், நோட்டு புத்தகம், சைக்கிள், காலணிகள் மற்றும் மடிகணினிகள் வழங்கும் திட்டமும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகையாக 1225 பயனாளிகளுக்கு ரூ.38,99,650 வழங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 20650 பயனாளிகளுக்கு ரூ.1000 வீதம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையின் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,405 பட்டதாரி பெண்களுக்கும், 3061 பட்டதாரி இல்லாத பெண்களுக்கும் ஆக மொத்தம் 4466 பயனாளிகளுக்கு ரூ.11.106 கோடி நிதியுதவியும், 12.400 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இது வரை 16731 பயனாளிகளுக்கு மருத்துவ உதவி ரூ.42,158 கோடி வழங்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் 13,56,073 மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடபுத்தகம், நோட்டு புத்தகம், காலணிகள், மிதிவண்டிகள் மற்றும் மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

கேத்தி பேரூராட்சி மூலம் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழு 14 பயனாளிகளுக்கு ரூ.29.40 இலட்சத்தில் வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொது நிதி மூலம் 148 பல்வேறு அடிப்படை வசதி பணிகள் ரூ.564.70 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்கள் மூலம் 78 பணிகள் ரூ.1023.79 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேத்தி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் 6 வார்டுகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் வாங்கப்படுகிறது. மீதமுள்ள 12 வார்டுகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் 468 தனி நபர் இல்லக்கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கேத்தி பேரூராட்சியை திறந்த வெளியில் மலர் கழித்தலற்ற பேரூராட்சியாக மாற்றும் பொருட்டு அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை விரைந்து கட்டி முடிக்குமாறு தெரிவித்தார்.

மேலும் இந்த ஊரை சுத்தம் செய்த பிறகு அதை சுத்தமாக வைத்து கொள்வதற்கு உங்களுடைய பங்களிப்பு அவசியம். தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. அவற்றை எல்லாம் பொது மக்களுக்கு வழங்க அரசு அதிகாரிகள் தயாராக உள்ளோம். எனவே பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 150 மனுக்கள் பெறப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் கோட்டாட்சியர் கீதாப்ரியா, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...