கோவையில் மாயமான மாணவிகள் கோழிக்கோட்டில் பத்திரமாக மீட்பு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் நேற்று(15.09.2017) காலை மாயமாகினர். இதனையறிந்து பதறிப் போன சிறுமிகளின் பெற்றோர்கள், இரண்டு சிறுமிகளும் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், சிறுமிகளை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டனரா? அல்லது பள்ளியை புறக்கணித்து எங்கேயாவது சென்றுள்ளனரா? என்ற கோணங்களில் துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மாணவிகள் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக ரயில்வே போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அமிர்தா வித்யாலயா பள்ளியில் இருந்து மாயமான குழந்தைகளா என்பதை முதலில் உறுதி செய்தனர். பின்னர், மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...