ஃப்ரோஷோன் வணிக வளாகத்தில் (PROZONE MALL) நாளை "நதிகளை மீட்போம்" இயக்க ஆதரவு பிரச்சாரம்


அழிந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் நதிகளை மீட்கும் விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' இயக்கம் நாடெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது. இந்த இயக்கத்திற்கு நாடெங்கிலும் பல்வேறு அமைப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஊர்காவல்படை தங்களது ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது. கோவை ஊர்க்காவல் படை கமாண்டர் தனசேகர் தலைமையில், ”நதிகளை மீட்போம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் 180 ஊர்க்காவல் உறுப்பினர்களுக்கு நதிகளை மீட்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், நதிகளின் முக்கியத்துவத்தையும், நதிகளை மீட்கும் விஞ்ஞான விளக்கங்களும் எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை குஜராத்தி சமாஜத்திலும்  நிகழ்த்தப்பட்டது. இதில், 150 பேர் கலந்துகொண்டனர்.

மேலும், அழிந்து வரும் நதிகளை மீட்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாளை (17.09.2017) மாலை 4 மணி முதல் 6 மணி வரை PROZONE MALL-ல் பாரத நதிகள் என்ற தலைப்பில் வினாடி வினா, கலைநிகழ்ச்சி போட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. கலைநிகழ்ச்சி போட்டியில் 7 முதல் 14 வயதுள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.  விளையாட்டு போட்டியில் அனைத்து வயது குழந்தைகளும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தொடர்புக்கு : 8300057000

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...