ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் - தமிழக அரசுக்கு மலை மாவட்ட மக்கள் நன்றி

தமிழக அரசின் உத்தரவின்படி, உணவு வழங்கல் துறையின் சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டைகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டை புதிதாக வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,07,049 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், உதகை வட்டத்தில் 31,996 ஸ்மார்ட் கார்டுகளும், குன்னூர் வட்டத்தில் 29,974 ஸ்மார்ட் கார்டுகளும், கோத்தகிரி வட்டத்தில் 18092 ஸ்மார்ட் கார்டுகளும், குந்தா வட்டத்தில் 11089 ஸ்மார்ட் கார்டுகளும், கூடலூர் வட்டத்தில் 22442 ஸ்மார்ட் கார்டுகளும், பந்தலூர் வட்டத்தில் 20554 ஸ்மார்ட் கார்டுகளும் ஆக மொத்தம் 1,34,147 ஸ்மார்ட் கார்டுகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலுள்ள நியாயவிலை கடைகளில் எவ்வித கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 72,902 குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு படிப்படியாக வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்திற்கு சென்று சேவை கட்டணமாக ரூ.30 செலுத்தி திருத்தம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்களில் இந்த சேவையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் கார்டு பெற்ற பயனாளி சுமதி கூறுகையில், நான் மடித்தொரை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஸ்மார்ட் கார்டு கிடைத்து விட்டது. எனவே தற்போது நான் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் கார்டாக மாற்றி தந்ததால் நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், பாமாயில், மண்ணெண்ணெய் எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதையும், நியாய விலைக்கடையின் பணி நேரத்தையும் ஆகியவற்றை கைபேசிக்கு வரும் எஸ்.எம்.எஸ்ஸின் மூலம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. எனவே இந்த திட்டத்தினை கொண்டு வந்த தமிழக அரசிற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...