பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் தூய்மையை கடைபிடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கழிப்பறைகள் பயன்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்க துவக்க விழா நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தூய்மையே சேவை என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தூய்மையே சேவை இயக்கம் நமது மாவட்டத்தில் 15.02.2017 முதல் 02.10.2017 வரை நடத்தப்பட்டு வருகின்றது. இம்முகாமில் அனைத்து அலுவலர்களும் முழு ஈடுபாடுடன் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வுகளில் ஈடுபடவுள்ளனர். அனைத்து நிகழ்வினையும் ஆவணப்படுத்தி அரசுக்கு தங்களது பணிகளை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



மேலும், இது தொடர்பாக தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வின் வாயிலாக பொதுமக்கள் அனைவரும் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், நீர் நிலைகள் மற்றம் இதர இடங்களில் தூய்மையை கடைபிடிப்போம் என்றும் வீடுகளில் கழிப்பறைகளின் பயன்பாட்டினையும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினையும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியனை ஏற்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடபிரிய உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...