மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் மாநகராட்சி பீளமேடு வார்டு எண்.56 பகுதியில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு, சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையை இணைக்கும் திட்டசாலை அமைக்கும் பொழுது, சாலையோர ஆக்கிரமிப்புதாரர்கள், பீளமேடு வார்டு எண்.56 கல்லூரி நகருக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். தற்போது இவர்களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் வெள்ளலூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி ஆக்கிரமிப்புதாரர்களை அகற்றும் பணி நடைபெற்றது. 

குடிசைகள் மற்றும் தற்காலிக வீடுகளுக்கு உண்டான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, அனைத்து தற்காலிக வீடுகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட 86 சென்ட் பரப்பிலான மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் (சுமார் 17.20 கோடி மதிப்பு) மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்களால் மீட்கப்பட்டு மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

அதேபோல், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வீரகேரளம், வார்டு எண்.18, கொங்கு நகர் பகுதியில் உள்ள 26.5 சென்ட் பரப்பும், கொங்கு நகர் பகுதியில் 13.3 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர் வார்டு எண்.93, ராஜு நகர் பகுதியில் உள்ள 30 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 69.8 சென்ட் பரப்பிலான மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு, சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...