மகாராஷ்டிரா மரம்நடு மாநாட்டில் நதிகளை மீட்போம் பேரணி பங்கேற்பு

மகாராஷ்டிரா அரசு ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து ‘மரம்நடும் மாநாடு-2017’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் பேரணியின் 15-ம் நாளான செப் 17-ம் தேதியன்று மும்பை ராஜ்பவனில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மஹாராஷ்டிரா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 50 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்த இம்மாநாட்டில் ஈஷா யோகாமைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மஹாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர்ராவ், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிரா மாநில நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முகாந்திவார், மகாராஷ்டிரா பழங்குடியினர் வளர்ச்சி மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜே அம்பரீஷ்ராவ் அற்றம், மகாராஷ்டிரா மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் பங்கஜ மண்டே, நடிகர் விவேக் ஓபராய், ஸ்ரீராம் குழுமத் தலைவர் அஜய்பிரமல், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, யோகா நிபுணர் எச்.ஆர்.நாகேந்திரா, பழம்பெரும் நடிகை வஹீதாரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக ஜூலை 1ம் தேதி மஹாராஷ்டிராவில் 5.43 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டது. அன்று நதிகளை மீட்போம் இயக்கத்தின் பகுதியாக ஈஷா அறக்கட்டளை மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கிடையே மகாராஷ்டிராவின் நதிக் கரைகளில் மரங்கள் நடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செப்-17 ம் தேதியன்று மும்பை ராஜ்பவனில் நடந்த மரம் நடும் மாநாட்டில் சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், இந்த தேசத்தின் நலனுக்காக அயராது உழைக்கும் ஜக்கி வாசுதேவுக்கு தமது நன்றியை வெளிப்படுத்தியதுடன் ஜக்கி வாசுதேவ் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமது ஆதரவு நிச்சயம் உண்டு என்றும் கூறினார்.



மேலும் அவர் நாம் இந்த பூமிக்கு ஆக்கப்பூர்வமானவற்றை செய்ய வேண்டும். அது நமது தலைமுறையில் பலனளிக்கவில்லையெனினும் நமது சந்ததியினர் அதனால் நம்மை நினைவுகூறுவார்கள் என்றார். இந்த விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் பொறுப்பை ஊடகங்கள் திறம்பட செய்ய வேண்டும் என்றார்.

2.82 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ததற்காகவும், 50 கோடி மரக்கன்றுகள் நட உறுதி மேற்கொண்டதற்காகவும் மஹாராஷ்டிரா அரசாங்கத்தை பாராட்டினார். மேலும் அவர், நாம் மரக்கன்றுகள் நடுவதோடு மட்டும் விட்டுவிடாமல் அவை இறந்து விடாமல் அவற்றை செம்மையாக வளர்க்க வேண்டும். இந்த அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலுக்கும் நம் அன்னை பூமிக்கும் பாதுகாவலராக ஆக வேண்டும் என்றார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் பேசுகையில், நதிகளை மீட்கும் இந்த திட்டத்தை தங்களுக்கு அளித்ததற்காக ஜக்கி வாசுதேவ்க்கு தமது பாராட்டுகளை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் நதிகளை மீட்போம் இயக்கத்தில் திறம்பட பங்கேற்பதோடு இந்த திட்டம் வெற்றிகரமாக நடக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். 

மேலும் இந்த இயக்கம் ஜக்கி வாசுதேவின் நோக்கம் அல்ல. இது ஜக்கி வாசுதேவ் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் நோக்கம். இந்தத் திட்டத்தில் மகாராஷ்டிரா அரசு முன்னணியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்றார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் முனைப்புடன் மரக்கன்றுகள் நடவுசெய்து கொண்டிருக்கும் அம்மாநில வனத்துறை அமைச்சரை பாராட்டினார்.

இதனைத்தொடர்ந்து, ஜக்கி வாசுதேவ் பேசுகையில், தமிழகத்தில் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் செயல்களை விளக்கினார். தமிழகத்தின் பசுமை போர்வையை 16.5 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த 11.4 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும். இதற்கு ஈஷா பசுமை கரங்கள் திட்டம் செயல்புரிந்து கொண்டிருப்பதையும் இத்திட்டத்தின்மூலம் இதுவரை தமிழகத்தில் 3.2 கோடி மரங்கள் நடவு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...