கண்துடைப்பிற்கா குறைதீர்ப்பு முகாம் ? காதில் பூசுற்றும் அதிகாரிகள்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்துடைப்பிற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி கோவை மாவட்டம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் இளைஞர் காதில் பூ சுற்றிக் கொண்டு இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது:-

"கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது புகார், குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு வழங்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை குறித்து ஆட்சியரின் உதவியாளர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய பதில் வருவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் வழங்கியுள்ள மனுவின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பினாலும் முறையான தகவல் இல்லை.

எங்களது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் எதற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெறுகிறார்கள் என்பதே தெரியவில்லை. மனுக்களை பெரும் ஆட்சியர் அதனை உரிய அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகிறாரா? அல்லது அந்த மனுக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா? இல்லை மக்கள் நலனுடன் ஆட்சியர் செல்படுகிறார் என பொதுமக்கள் காதில் பூ சுத்துவதற்காக இந்த குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறதா என பல்வேறு கேள்விகள் உள்ளன" என்றார்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...