சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியரிடம் மனு


சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



இது தொடர்பாக தேமுதிக சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும், அனைத்து அரசு கட்டிடங்களையும் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...