சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியரிடம் மனு


சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



இது தொடர்பாக தேமுதிக சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும், அனைத்து அரசு கட்டிடங்களையும் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...