பள்ளி மாணவிகள் மாயமான விவகாரம்: முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேர்வு எழுத மாணவிகளுக்கு அனுமதி



கோவை துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் அமிர்தா வித்யாலயா என்ற தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. 

இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் கடந்த 15-ம் தேதி மாயமாகினர். இது குறித்து, மாணவியின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததுடன், பள்ளி சென்ற மாணவிகள் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, மாணவிகள் இருவரும் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மாணவிகள் இருவரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இந்த நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற இரு மாணவிகளையும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முறையான கவுன்சிலிங் பெற்ற பின்னரே மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் மாணவிகளின் படிப்பு பாதிக்கும் என்று கூறியும், உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர் பள்ளி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்போது அமிர்தா வித்யாலயா பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டதன் பேரில் மாணவியை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...