கோவையில் கட்டிடக்கலைக் குறித்த 3 நாள் கண்காட்சி செப்., 22-ம் தேதி தொடக்கம்


ஐ ஏட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் கட்டுமான தொழில் மற்றும் கட்டிடக்கலைத் தொடர்பான கண்காட்சிகளை தென்னிந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை முதலில் சென்னையில் சி.ஏ.ஐ. கண்காட்சி 2017 என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியின் மூலம் தொழில்நிறுவனம், கட்டிடப் பணியாளர்கள், கட்டமைப்பினர் மற்றும் கட்டுமான உபகரணங்களை செய்வர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் பாலமாக உள்ளது. 

இந்த நிலையில், "சி.ஏ.ஐ. கண்காட்சி 2017" என்ற கண்காட்சியை கோவையில் நடத்த ஐ ஏட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் கட்டிடக்கலையில் உள்ள சிறந்த படைப்புகள், புதிய தயாரிப்புகள் மற்றும் யோசனைகளை பறிமாறிக் கொள்ள உதவியாக அமையும். 

கோவையில் நடக்கும் கண்காட்சிக்கு டைட்டில் ஸ்பான்சர் தூசன் பாப்கேட் ஆகும். மேலும், டெக்னோரெயில், நிப்பான் பெயிண்ட், ஜெம் பெயிண்ட், பிரைம், கமய் எலிவேட்டர்ஸ் மற்றும் கிளாஷிக் கிச்சன் போன்றை கோ-ஸ்பான்சர்களாக உள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கிய இந்தக் கண்காட்சிகள், அதிக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்டிருப்பதால், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டில், சென்னை, கோவையை தொடர்ந்து, ஐதராபாத், கோவா போன்ற நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...