கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களை புறக்கணித்த கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.கிருஷ்ணசாமி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1996ம் ஆண்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணி கட்சியின் ஆதரவோடு இரண்டாவது முறை வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினரான இவர் திமுக,அதிமுக கூட்டணிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்திருந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணக்கமாக இருந்த டாக்டர்.கிருஷ்ணசாமி தேர்தலில் தோல்வியடைந்தார்.

இதனை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் நெருக்கமானதுடன் மத்திய அரசின் கொள்கைகளை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அரியலூர் மாணவி அணிதா மரணம் குறித்து இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் அவரது கருத்திற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமூக நீதி அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம், உங்கள் மகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில்தான் குறைவான மதிப்பெண் பெற்ற உங்கள் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்ததாக முன்னாள எம்.எல்.ஏ. பாலபாரதியின் குற்றசாட்டிற்க்கு பதில் என்ன என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் பா.ஜ.கா.வின் நிலைப்பாட்டை ஆதரிக்க நீங்கள் மருத்துவ கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளி துவங்க மத்திய அரசிடம் அனுமதி பெறதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கேள்வி எழுப்பினர்.

மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற மத்திய அரசுக்கு சாதகமாக நடந்துகொள்வதாக அரசியல் கட்சியினர் குற்றம் சுமத்துவதாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி, பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் இந்நிலையில், இன்று (19.09.2017) அவரது வீட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கடந்த முறை கேள்வி எழுப்பிய சில முன்னணி பத்திரிக்கைகளை தவிர்த்து குறிப்பிட்ட சில பத்திரிக்கைகளை மட்டுமே அழைத்துள்ளது பிற ஊடகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...