தோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்க மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை

கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவர். அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுக்களுக்கு தகுதியான நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. 

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த முன்னாள் கேப்டன் தோனியை, நாட்டின் உயரிய 3-வது சிறந்த விருதான பத்ம பூஷண் விருதுக்கு, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. தோனியை தவிர வேறு யாரையும் பத்ம விருதுகளுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவில்லை. ஏற்கனவே தோனி, கேல் ரத்னா (2007), பத்ம ஸ்ரீ (2009) விருதுகள் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வந்த தோனி(36),  இதுவரை 302 ஒருநாள் (9737 ரன்), 90 டெஸ்ட் (4876 ரன்), 78 சர்வதேச 'டுவென்டி-20' (1212 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் 'நம்பர்-1' இடம் பிடித்தது. இந்திய அணிக்கு மூன்றுவிதமான (2007ல் 'டுவென்டி-20', 2011ல் 50 ஓவர் மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி) உலக கோப்பை பெற்றுத் தந்தார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...