டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி மரணமடைந்ததால் ஆத்திரம்: சுகாதாரமற்ற கழிவறையை இடிக்க திரண்ட பொதுமக்களால் பதற்றம்

டெங்குக் காய்ச்சலை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிகிச்சை பலனின்றி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை கணபதியை சேர்ந்த காதார் பாட்ஷா என்பவரது மகள் தாஜ் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில்,  சிறுமியின் வீட்டின் அருகே உள்ள பொது கழிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாலும், மழை நீர் தேங்கியே இருப்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி அதனாலேயே சிறுமி உயிரிழந்திருப்பதாக கணபதி பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சிறுமி பலியானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரமற்ற முறையில் கிடந்த, கழிவறையை இடிக்க முயன்றனர்.



இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திரண்டிருந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒரு வார காலத்திற்குள் சுகாதாரமின்றியும், யாரும் உபயோகப்படுத்தாமல் இருக்கும் கழிவறையை இடித்து அகற்றுவதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் கணபதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் டெங்கு பீதி சற்றே ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள், டெங்குவை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...